Thursday 24 March 2016

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே!

தமிழன்னையே ! ஆள்வாய் என்னையே! கருவிலிருக்கையிலே எங்கம்மா கருவறையில் கருவாகி வந்த அன்னையே - என் கருவாக வந்த அன்னையே - உணர்வின் திருவாக வந்த அன்னையே - அங்கு உருவிலிருக்கையிலே உயிருக்குள் உயிராக உணர்வில் கலந்த அன்னையே - பந்த உணர்வைத் தந்த அன்னையே - சொந்த உறவைத் தந்த அன்னையே ! தெருவில்தவ்ழ்கையிலே அப்பாமுதல் அன்பர்வரை தெளிவில் ஒளிர்ந்த அன்னையே - எந்தன் தெளிவாய் மிளிர்ந்த அன்னையே - சிந்தும் மொழியில் பொலிந்த அன்னையே - உந்தன் அருகிலிருக்கையிலே செடிகொடி விலங்குகள் அத்தனையும் சொன்ன அன்னையே - நீதான் அத்தனைக்கும் ஆசான் அன்னையே - முதலில் கத்துத்தந்த பள்ளி அன்னையே ! குருவிலிருக்கையிலே அவர்சொல்லும் பாடங்களை ஒப்பிடவே தந்த அன்னையே - கற்க ஒப்பிடவே செய்த அன்னையே - ஒன்றும் ஒப்பு உயர் வற்ற அன்னையே - எந்தன் உருவிலிருந்துகொண்டு மாணாக்கர் மான்புபெற உரைக்கும் சொல்லின் அன்னையே - ஆறாம் உறைக்கும் சொல்லின் அன்னையே - உயிர் வரைக்கும் ஆள்வாய் என்னையே ! - ஏழைதாசன் பி 3/5, ஆலங்குளம் குடியிருப்பு புதுக்கோட்டை -622 005 பேச : 9751 330 855

No comments:

Post a Comment