Thursday 24 March 2016

தலித் துணைவேந்தரைத் தேடி "

" தலித் துணைவேந்தரைத் தேடி " என்ற தலைப்பில் ஜெ.பாலசுப்ரமணியனின் கட்டுரை இன்றைய காலத்தின் குரலாகப் பரிமளிக்கிறது. இதிலிருந்து ஏராளம் கேள்விகள் படிப்பவருக்குள் பரிணமிக்கின்றன. தகுதியான துணைவேந்தரைத் தேடுகிற காலத்தில் - தகுதியான பேராசிரியரைத் தேடுகிற காலத்தில் தலித் துணைவேந்தரைத் தேடிமட்டும் என்ன ஆகிவிடப் போகிறது ? தலித்திலும் கோடி கொடுக்கும் தலித்துக்குத்தானே கிடைக்கப் போகிறது ?! அண்மையில் காலமான பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக வந்திருக்க வேண்டியவர். அவரைவிடத்thakuthk குறைவானவர்க்கெல்லாம் பணபலம், சாதிபலம், அரசியல்பலத்தைக் கொண்டு துணைவேந்தர்களாக வந்துவிட்டார்கள்.இந்த மூன்று பலமும் அவரிடம் இல்லாததால் அவருக்குப் பழம் பழுக்கவில்லை. ஒருவேளை, தலித் துனைவேந்தருள் தகுதியான துணைவேந்தர் யாரேனும் வந்தால் , பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பலாம். வேறென் நடந்துவிடப் போகிறது? ஒரு மன ஆறுதலைத் தவிர ?! ---- முனைவர் சு.மாதவன், தமிழ் உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ., மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

3 comments: