Thursday 24 March 2016

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை

இந்தியர்களின் மரபணுவில் சாதி ' என்ற மோஹித் எம்.ராவின் கட்டுரை அருமை. இதுபோன்ற ஆய்வுகளை இந்தியச் சாதிகள் ஒவ்வொன்றின் மரபணுக்களின் மூலமாகவும் மேற்கொள்ளவேண்டும். எல்லாச் சாதிகளைச் சார்ந்த சமூக மாற்றச் சிந்தனையில் உண்மையான ஈடுபாடு உள்ளவர்களிடமிருந்தும் குறிப்பிட்ட அளவிலான மரபணுக்களைப் பெற்று ஆய்வுசெய்து பார்த்தால் எந்தச் சாதிக்கும் அந்தச் சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரே அளவிலான விடை கிடைக்காது. அதாவது, ஒரே மரபணு / மரபணுப் பொதுமை இருக்காது. அதாவது, எந்த ஒரு சாதிக்கும் அந்தச் சாதிக்கு மட்டுமே உய்ய மரபணு வடிவம்,செயல்நிலைப் பண்புகள் என எதையும் வரையறுக்க முடியாது.ஒரே சாதிக்குமட்டுமே உரிய தனித்தன்மை எதையும் வரையறுத்துவிடவும் முடியாது என்றே கருதுகிறேன். எனினும், இத்தகைய ஆய்வுகள் சமூகத்தின் மனசாட்சியைச் சமத்துவ மனசாட்சியாய் மாற்றுவதற்குரிய பங்களிப்புகளாக விளங்குவன எனில் அது மிகையில்லை. ---- முனைவர் சு. மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855 வாசகர் மடல்

No comments:

Post a Comment