Friday 6 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 5. தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம் - முனைவர் போதிபாலா, முனைவர் க.ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன்...05.01.2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 5 தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம் - முனைவர் போதிபாலா, முனைவர் க.ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன் ( பதிப்பாசிரியர்கள் ) 05.01.2023 இந்த நூல் 24 .3 .2013 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் ' என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் 389 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூல் 2013 ஆம் ஆண்டில் முதன் பதிப்பாக வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் பௌத்த மறுமலர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் இறுதிக்காலத்திலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நிகழ்ந்தது. இந்த மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள் மூவர். முதலாமவர் அயோத்திதாச பண்டிதர். இரண்டாமவர் ம.சிங்காரவேலர்.மூன்றாமவர் பேராசிரியர் லட்சுமி நரசு. இம் மூவரோடு இலங்கையைச் சார்ந்த , இந்தியாவைச் சார்ந்த சில பௌத்தப்பிக்குகளும் இம் மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சி தனது அயோத்திதாச பண்டிதரின் நினைவு நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்தது. அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இது நிகழ்ந்தது. 100 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்பட்டிருந்த,மறக்கப்பட்டிருந்த அயோத்திதாச பண்டிதரின் படைப்புகள் குறித்த உரையாடல் தமிழ்ச்சமூகத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியில் ஞான. அலாய்சியஸ் ,இ.அன்பன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். ஒப்பிட்டு அளவில் முதலாம் பௌத்த மறுமலர்ச்சியை விட அதிகமான பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது தற்பொழுது நடந்துவரும் இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியாகும். இங்கு கவனத்தில் கொள்ளத்தக்க செய்தி ஒன்று உண்டு. 19,20 , 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்துவரும் பௌத்த மறுமலர்ச்சிப் போக்குகளுக்கான அடிப்படைக் காரணகர்த்தராக விளங்குபவர் அயோத்திதாச பண்டிதர் என்பதே அச்செய்தியாகும். அந்த அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டு வேர்களில் பௌத்தச் சிந்தனைகள் எவ்வாறு ஊடுருவி இருக்கின்றன என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிக்கொண்டு வந்தவர் பண்டிதர் ஆவார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் மேற்கண்ட கருத்தை உறுதி செய்கின்றன. இத்தகைய பௌத்த மறுமலர்ச்சியின் மிக முக்கியமான ஆவணம் இந்தக் கட்டுரை தொகுப்பாகும்.இந்நூலில் 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 36 கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள். 6 ஆங்கிலக் கட்டுரைகள்.ஒரு தொடக்க உரைக் கட்டுரை. ஒரு நிறைவரங்கக் கட்டுரை என்றவாறு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 42 கட்டுரைகள் குறித்த பொருளடக்க நிரல் பின்வருமாறு: 1.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் - கருத்தரங்க துவக்கஉரை- மடுளுகிரியே விஜேரத்னா - 1 2. தமிழர் பண்பாட்டில் பௌத்தம் - பேராசிரியர் கேப்டன் எஸ் கலியபெருமாள் - 8 3.இந்துக்கலையின் முன்னோடி பௌத்தக் கலையே - மு.நீலகண்டன் - 22 4.நவீன பௌத்த இலக்கிய வரலாறு - பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன் - 33 5.இரட்டைக் காப்பியங்களில் பௌத்தம் - டாக்டர் கி. ஆதிநாராயணன்- 45 6.மணிமேகலையில் தேரவாத பௌத்த கோட்பாடுகள் - க. ராஜா - 51 7.மணிமேகலையில் தேரவாத பௌத்த கோட்பாடுகள் - திருமதி இந்து பாலா - 59 8.தமிழகத்தில் பௌத்தம் - ப. கந்தன் - 68 9.பௌத்த தமிழ் இலக்கியங்கள் - முனைவர் பா.வல்சகுமார் - 74 10.பௌத்தமும் புறநானூறும் - முனைவர் நா.அறிவுராஜ் - 86 11.பௌத்தமும் பக்தி இயக்கமும் - பேராசிரியர் முனைவர் க.ஜெயபாலன் - 94 12.பௌத்தச் சிறு தெய்வங்களும் தமிழர் வாழ்வும் - பெ. விஜயகுமார் - 103 13.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பௌத்தம் - நா. வீரமணி - 117 14. 19 ஆம் நூற்றாண்டின் பௌத்த மறுமலர்ச்சியும் பௌத்த அறிவுசார் மரபும் - வீ. ஐயப்பன்- 130 15.அயோத்திதாசரின் தமிழ் பௌத்தம் - பாரி செழியன் - 139 16.ஆத்திச்சூடியில் பௌத்தம் - தமிழ் பண்பாடே - இரா விஜய கண்ணன் - 147 17.களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993 - 2012 ) - முனைவர் பா.ஜம்புலிங்கம் - 153 18..பிரபந்த இலக்கியங்களில் பௌத்தக்கூறுகள் - க.அமரேசன் - 163 19.பௌத்தமும் சமணமும் : மெய்யியலும் நடைமுறையும் - முனைவர் சு.மாதவன் - 171 20.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் - ஓர் ஆய்வு கவிஞர் கவிஅரங்கன் - 184 21.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பௌத்தச் சிந்தனைகள் - சீ.கோகிலா - 195 22.அசோகர் காலம் முதல் இன்று வரை பௌத்த நிலை - முனைவர் D.பார்த்திபன்- 204 23. கவிஞர் தமிழ் ஒளியின் காவியம் காட்டும் பௌத்த நெறி - மு.பா.எழிலரசு - 220 24.தமிழ் இலக்கியங்களில் பௌத்தப்பிக்கு,பிக்குணிகள் பற்றிய குறிப்புகள் - நா. ஆறுமுகம் - 234 25.புத்தர் பொன்மொழி நூறு (செய்யுள் நூல் ) - முனைவர் கேப்டன் திருமதி பா.வேலம்மாள் - 240 26.அயோத்திதாசரின் தமிழ்ப்பௌத்தமும் கல்வி உரிமையும் - முனைவர் சு.சக்திவேல் - 247 27..தமிழகத்தில் பௌத்தம் அசோகர் முதல் இன்று வரை - மல்லை தமிழச்சி - 253 28. தமிழ் நிகண்டுகளில் பௌத்தச் சிந்தனைகள் - முனைவர் இரா பசுபதி - 258 29.தொண்டை மண்டல புத்த ஞாயிறு கோயில் - முனைவர் வை.இராமகிருஷ்ணன் - 275 30.பௌத்தம் - சமணம் - வள்ளுவம் - பேராசிரியர் செ.ஏழுமலை - 285 31.பௌத்தமும் ஜைனமும் - இரா நல்லையா ராஜ் - 291 32.பௌத்தமும் பக்தி இயக்கங்களும் - முனைவர் சு. சிவசங்கர் - 301 33.பௌத்த மறுமலர்ச்சிக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் வித்திட்ட அயோத்திதாசர் அம்பேத்கரின் சமூக மாற்றத்திற்கான கல்விச் சிந்தனைகள் - முனைவர் பா.ஆரோக்கியதாஸ் - 310 34.தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சி - மா.ரா. பேரொளி தாசன் - 319 35.தமிழ் பண்பாட்டில் பௌத்தம் - தமிழ் மறையான் - 324 36.Buddhist vestiges located in recent times in Tamilnadu - Natana Kasinathan - 335 37. The role of Tamil speaking Buddhist marks for the development of pali literature - Ven. Dr.Bodhipala - 340 38.Reflection of Buddhist education towards human character - Phramaha Jaroon Rithithit - 354 39.Contribution of Tamil speaking Buddhist monks for development of Sanskrit Buddhist literature- Upasaka E.Anban - 359 40. Bodhiruchi ( later period of 7th century AD and earlier period of 8 Century AD - - 364 41.Buddhism and Bhakti movement - T. K.Parthasarathy - 367 42.கருத்தரங்க நிறைவரங்கம் - முனைவர் து.பார்த்திபன் - 374 இந்தத் தொகுப்பில் உள்ள 40 கட்டுரைகளில் சமயப் பொருண்மைசார் கட்டுரைகள் - 4 , கலை - 1 , இலக்கியம் - 14 , நாட்டுப்புறவியல் - 1 , அயோத்திதாசர் - 4 , கள ஆய்வு - 2 , ஒப்பாய்வு - 5 , வரலாறு - 3 , பண்பாடு - 3 , பாலி - 1 , சம்ஸ்கிருதம் - 1 , .... ஆகிய பொருண்மைகளில் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் தொகுப்பாளர் உரை, பதிப்புரை ஆகிய இரண்டும் உள்ளன. இந்த 40 கட்டுரைகளின் தலைப்புகளே இந்தப் பன்மொழிப் பன்னாட்டுக் கருத்தரங்கின் பெறுமதியை எடுத்தியம்ப வல்லனவாய் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் சங்க காலம் தொட்டுத் தற்காலம்வரையில் நீக்கமற நிறைந்துள்ள மிக முக்கியமான சிந்தனை மரபாகும் பெளத்தச் சிந்தனை மரபு இடையறாது திகழ்ந்து வருகிறது என்பதைக இக் கட்டுரைகள் வெள்ளிடை மலையென எடுத்தியம்புகின்றன. தமிழில் பெளத்தம் குறித்த தேடலாய்வில் ஈடுபடுவோர், பெளத்த வாழ்வியல் கடைப்பிடி நெறிகளில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் அவசியம் பயிலவேண்டிய நூலாக இந்நூல் விளக்குகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்த பதிப்பாசிரியர்கள் மூவர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் ஆவர். பதிப்பக முகவரி: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை -600 024 பேச : 044 23726682/ 9840480232 மின்னஞ்சல் : kaavyabooks@gmail.com விலை :350/-

No comments:

Post a Comment